மோனம்
மோனம்
வெகுநேரம் அழு.
கண்ணீர் வழிந்து
கன்னம் வழியோடி
ஓரு குளமாய்
ஆன போதிலும் சரியே
.
உடற்கலங்கள் விம்ம
முதுகும் குலுங்கட்டும்
அல்லது
முன்னங் கைகளால
முழங்காலைக்கட்டிக்
கொண்டாயினும் சரியே
கண்ணீர் ஓடி
கடைவாயில் ஊறி
உப்புச் சுவை
உணரும் வரையும்
அழு
அழு (க்குகள்)
கரையட்டும்.
11990
No comments:
Post a Comment