Thursday, July 2, 2015

நாளைக்குப் பெருநாள்

நாளைக்குப் பெருநாள்

வானப்பிறை
காதுச் சிமிக்கி அணிந்தது

குரோட்டன்கள்
மருதாணி அணிந்தன

வண்ணத்துப் பூச்சிகள்
வர்ணம் மாற்றின.

என் மகளும்
தாவணியில் புதிதாகத்
தைத்துக் கொண்டிருந்தாள்

பழைய
பொத்தல்களைத்தான்.

1990

No comments:

Post a Comment