Thursday, July 2, 2015

பிறவித் தவம்

பிறவித் தவம்



பெருநதிப் பரப்பில் சிறு இலை மீதில்
ஒரு எறும்பு


ஒரு துடுப்பின்றி
நதி கடக்க எத்தனம்
நகர் தேடி நகர் தேடி 
நகர்கின்ற முயற்சி


ஊர் வீதியில்;
ஒரு நறுமணத் தேவதை
மஞ்சம் தொட அழைக்க-
மகிழ்வுறும் எறும்பு 
நாகங்களை மறந்து..
ஆயின்-


சிறுபடகோடும் சிறுநகர் வணிகரோ
பெருநதிப் பரப்பில் 
சிறு இலை மீதில்
ஒரு துடுப்பின்றிச் - சென்ற
சிறு எறும்பின் 
தலைவிதி எழுதிட


நெடுவொரு நாளில்
ஓரு இறை ஞானம்
தருமறைபொருள் விளங்க
இலைச் சிறு எறும்பு
இறையடி சேரும்.

1989.

No comments:

Post a Comment