Thursday, July 2, 2015

இடது கை இறைவனின் படைப்புகள்

முன்னுரை.

இவை  இடது கை இறைவனின் படைப்புகள் 

 அக்கரைமாணிக்கம்.


நவீன தமிழ்க் கவிதை உலகில்  பழைய மரபுசார் எழுத்துக்கள் கட்டுடைக்கப்பட்டு வருகின்றன.. இதன் உச்சக்கட்டமாக எவரும் எவ்வேளையும் மிக இலகுவாக கவிதை (?) எழுதி விடுகிறார்கள்.. புதியவர்களின் வருகை கவிதைத்துறைக்கு வரவேற்புக்குரியதாக இருந்தாலும் சிலரது எழுத்துக்கள் வாசிக்கக் கூடியவாறு இல்லை என்பது உண்மை. காதலும் பாலியலும் தமிழச் சினிமாக்களில் மலிந்து கிடப்பது போலவே ஈழத்துக் கவிதையுலகிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது.

ஈழத்துக் கவிதையுலகு தரமும் காத்திரமுமிக்க பங்களிப்பை உடையது. தமிழிலக்கியத்திற்கு  போர்க்கால இலக்கியம் புலம் பெயர் இலக்கியம் என இரு பெரிய புதுப்பாதைகளை அமைத்துக் கொடுத்தது. அப்பாதைகளில் சென்று அதிநவீன கவிதைகள் படைத்துச் சிறப்புற்றோர் பலர்.  அதை விடுத்து மலினச் சரக்குளைக் கையாண்டு கவிதை என்ற பேரால் சண்டித்தனம் செய்வோர் சிலருண்டு.
     
மரபைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் அது பற்றிய சொற்ப அறிவு கூட இல்லாமல் நவீன கவிதை படைக்க முடியமென நினைப்பது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல.. பரந்துபட்ட வாசிப்புத்தான் பண்பட்ட படைப்புகளை உருவாக்க முடியும்.

அபாயா என் கறுப்பு வானம் என்ற இக்கவிதைத் தொகுதியை தந்திருக்கும் தீரன். ஆர். எம். நௌஸாத் 1983களில்  தூது என்ற கவிதைச் சிற்றிதழ் ஒன்றினை நடத்தியவர். தவிரவும் தென்கிழக்கின் நாவல் தேக்கத்தை உடைத்து அதை உலக அரங்குக்கு கொண்டு சென்ற ஒரு புகழ்பெற்ற  நாவலாசிரியர் மட்டுமன்றி ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளருமாவார்.  அவர் மரபு-புதுக் கவிதைகளிலும் பரிச்சயமுடையவர்.

      தமிழ்நாடு ~காலச்சுவடு|  இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில்  இவர் தனது ~நட்டுமை| நாவலுக்கு முதற் பரிசு வென்றவர். தனது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதிக்கு  2011ல் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டவர்.. 1998ல்  ~தினக்குரல்| நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| என்ற தனது வானொலி நாடகத்திற்கு 3ம் பரிசு பெற்றவர்.  இவரது ~நல்லதொரு துரோகம்|  என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம்  முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..        அத்துடன்ää இவரது ~சாகும்-தலம்.| சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.. அபாயா- என் கறுப்பு வானம் என்ற இக்கவிதை நூல் இவரது ஐந்தாவது நூல் ஆகும்.

தீரன்; என்னோடு சிலகாலம் ஒன்றாக ஒரே திணைக்களத்தில் கடமை செய்தவர். அவரை எனக்கு மிக நன்றாகத் தெரியும்.. இடது கையால் எழுதும் பழக்கம் கொண்டவர். மனமுவந்து பழகுவதில் சிறந்தவர். நகைச்சுவை அவருக்கு ஒரு இயல்பான விடயம். இலகுதமிழ் அவருக்கு கைவந்த கலை.

தான் படைத்த நூற்றுக்கணக்கான கவிதைகளில் மிகச் சிலவற்றையே இந்நூல்வாயிலாகத் தந்துள்ளார்.  அதிலும் குறும்பா- வெண்பா- ஹைக்கூ-விருத்தம-புதுக்கவிதைகள்;- காவியம் என்று பல்சுவைக் கதம்பமாக இதை ஆக்கியுள்ளார்.

அவரது மரபுசார் கவிதைகளில் பல இலக்கண வழுக்கள் இருந்த போதிலும் அது வாசிப்புக்கு ஒரு தடையாக இருக்கவில்லை.. அவர் மரபு புது வடிவங்களில் இந்நூலில் சில இடங்களில் புயலாக வீசியிருக்கிறார். சில இடங்களில் ஒரு தென்றலாக வருடியிருக்கிறார்.  ஒவ்வொன்றாக நான் எடுத்துச் சொல்வதை விட வாசகர் நீங்களே  இதை நேரிடையாக அனுபவிக்க முடியும்.... இத்தொகுதியை வாசித்த பின் என் இந்தக் கருத்தோடு உடன்படுவீர்கள் என்பது திண்ணம்.

நூலாசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 

கலா”ஷணம். அருட்கவிஞர் அக்கரைமாணிக்கம்.
பாண்டிருப்பு.

சமர்ப்பணம்


சமர்ப்பணம்.





கல்முனை புகவம் தலைவர்
கவிஞர். எஸ்.எம்.எம். றாபிக்.

கல்முனை புகவம் பொருளாளர்
ஏ.எல். கபூர்

ஆகியோருக்கு.

செல்பேசி--- நில்லா நிலா (சிறுவர் இலக்கியம்)

செல்பேசி 


செல்பேசி

மணியடிக்குது ஒரு கருவி
மனிதருக்கு வருது செய்தி
ஒலியெழுப் பும்அக் கருவி
உடனுக்குடன் பேசுது விரும்பி

செல்லு மிடமெல்லாம் செய்தி
செல்லிடப் பேசி ஒரு கருவி
அனுப்பிடும் பலகுறுஞ்செய்தி
அனுப்புநர் முகம் காணும் வசதி.

ஆகாய அலைகளில் ஊடுருவி
       ஆட்களை அடைந்திடும் கதிரருவி
  கையடங்கிக் கதைத்திடும் கருவி
   காதுகளில் சினுங்கிடும் கதைக்குருவி.

   (2000)







நில்லா நிலா 



நில்லா  நிலா



நிலா நிலா
நில்லாமல் நீ எங்கே செல்லுகிறாய்..?p

”மியினைச் சுற்றிவரப் போகிறேன்
புதுமைகளைக் கண்டுவரப் போகின்றேன்.

நிலா நிலா
நில்லாமல் நீ எங்கே செல்லுகிறாய்..?p

சூரியனைச் சுழன்று வரப் போகின்றேன்
சோளர்களை எண்ணி வரப் போகின்றேன்

நிலா நிலா
நில்லாமல் நீ எங்கே செல்லுகிறாய்..?p

கிரகங்களைக் கண்டுவரப் போகின்றேன்
கிரமமான பாதையிலே போகின்றேன்

நிலா நிலா
நில்லாமல் நீ எங்கே செல்லுகிறாய்..?p

பால்வீதியைப் பார்த்துவரப் போகின்றேன்
வால்வெள்ளியை வாங்கிவரப் போகின்றேன்

நிலா நிலா
நில்லாமல் நீ எங்கே செல்லுகிறாய்..?p

வண்ணமான வானவில்லில் வளையல் செய்து
 வடிவான பிள்ளை உனக்குத் தரப் போகின்றேன்
          (2000)

கணினி -(சிறுவர் இலக்கியம்)


கணினி




ஒளிரும் திரையில் ஓருலகம்
மிளிரும் கணினி பயில்வோம்
தெளிவுறு உருவினில் தெரியவரும்
அகிலத்தின் ரகசியம் அறிவோம்.


விரிந்திடும் வையக வலையிலே
வியப்புறு செய்திகள் வரைவோம்
தெரிந்திடும் இணையத் தளத்திலே
உலவியே தகவல்கள் அறிவோம்


மென்பொருள் வன்பொருள் தெரிவோம்
கண்ணுரு அய்க்கண்; காண்போம்.
சுட்டியின் அசைவிலே அகிலத்தை
சுற்றியே வருவோம் சுட்டிகளே..
(2000)



விண்வெளி - (சிறுவர் இலக்கியம்)

விண்வெளி
 



விண்வெளி


பரந்து விரிந்த விண்வெளியே - உன்னில்
பொதிந்திருக்கும் புதுமைகள்தாம் என்னே .

எண்ணற்ற கோள்கள் மிதப்பதுவும்
எங்ஙணும் அவையெல்லாம் தொங்குவதும்
கண்ணற்ற விண்மீன்கள் நீந்துவதும்
கவினுறும் காட்சிகளாய்த் தெரிவதுவும்

பால்வீதி பலகாதம் பாய்வதுவும்
பகலிரவு மாறிமாறிச் சுழல்வதுவும்
நீள்வெளியாய் வானம் விரிவதுவும்
நிலமெலாம் மழையருவி பொழிவதுவும்

கோடிமின்னல் பளிச்சிட்டு முழங்குவதும்
குவலயத்தை பேரிடிகள் குலுக்குவதும்
மூடிவரும் மேகங்கள் கலைவதுவும்
முதலொளி எங்ஙனுமே
 பரவுவதும்..

பரந்து விரிந்த விண்வெளியே - உன்னில்
பொதிந்திருக்கும் புதுமைகள்தாம் என்னே ..
(2000)


ஹைக்கூகள் சில....

ஹைக்கூ- 
நகப்பொட்டில்நவபிரபஞ்சம் 



சின்ன விருட்சம்
இறைநேசரின் நிஷ்டை.
தலையில் சிட்டுக்கள்; கூடு..
        0

இருட்டுவழித் தோழர்
குருடனுக்கு வெளிச்சம் ஏன்
கல்லறையில் மின்மினி
        0

வாழ்த்துக்கள் நண்பா
உனக்கென வாங்கிய புதுப்பாதணி
கைகளில் ஊண்றுகோல்.
        0

தகர டப்பா நிறைந்தது
வயிறு நிறைந்து பசி தீர்ந்தது
இன்று பெய்த மழை..
        0

பனித்துளியில் உவரா...
பருகாது பறக்கும் வண்டே
கன்னத்தில் கண்ணீர்.
        0

மேலே சுண்டி விட
கீழே வரவில்லை நாணயம்
”ரணை தினம்.
        0

படுக்கையறை இரகசியம்
பகிரங்கத்தில்
மணிக்கூட்டில் பன்னிரண்டு மணி.
        0

திறக்கத் திசைகள் தேடி
தினமும் அலையும்
சிவனின் நெற்றிக் கண்.
        000



குறும்பாக சில குறும்பாக்கள்


குறும்பாக சில குறும்பாக்கள் 


01  கருணை

காவி மொட்டை பஸ் ஒன்றில்    ஏறி
கடிந்தார் நான் குரு என்று      கூறி
குருமாருக்கு மட்டுமதில்
குந்தி வந்த முடவனெழ
கருணை அமர்ந்தார் தம்மம்     மீறி.


02  துர்-அதிர்ஷ்டம்

விழுமென்றே நம்பியொரு கோடி
விழுந்தெடுத்தார் லொத்தரைத்தான் நாடி
விழவில்லை ஒருநாளும்
விழாதென்று கிழித்து வீசி
விட்டடெறிந்ததில் இருந்ததிரு கோடி


03  கால்

சீற்றின் கீழ் தன்கால்   விட்டான்
சீற்றின் முன் பெண்கால் தொட்டான்
சோக்காகத்  தடவிவிட்டார்
சேருமிடம் வந்தபின்னே
செயற்கைக்கால்- மிரண்டு விட்டான்.


04  மறி-யல்

விற்க வந்தாள் ஒரு சிறுமி     பிட்டு
வந்தவளைத் தனியறைக்குள்   விட்டு
வளர்த்தாட்டி விளையாடி
வம்புசெய்தார் கிழட்டப்பா
விளக்கமறியலில்; கிழவன்     மாட்டு.


05  சுயநலசரிதை

எத்தனையோ புத்தகங்கள்   போட்டேன்
எவர்தலை கட்டி காசு      சேர்த்தேன்
எவரேனும் நூலொன்று
எழுதியுள்ளேன் எடுங்களென்றால்
என்பணமீந்து வாங்க    மாட்டேன்.


06  ஆ..வேஷம்

தாடிஜிப்h தலைப்பாகை     தொப்பி
ஆடையெல்லாம் அத்தர்     அப்பி
தங்கியிருந்தார் பள்ளித்
தொண்டு; செய்தொரு நாள்
உண்டியலுடன் போனது ஆள் தப்பி


07  இணை-யம்

பிள்ளைக்குப் படிக்க இன்டர்    நெட்டு
”பூட்டினர் கொம்பியுற்றர் கடன்   பட்டு
பேஸ்புக்கில் சட்டடித்து
பாஸ்போட்டும் முடித்தெடுத்து
பறந்தாள் பெற்றோரைக் கை   விட்டு.


08  கிறீஸ்மேன்

எங்கிலுமே கிறீஸ்மேன்தான்   பேச்சு
எல்லோரும் வீடடங்க        ளாச்சு
எத்தனிவன் ஏகலைவன்
ஏறிக் கூரைபிரித்து
எடுத்துச் சென்றான் கோழி   போச்சு


09  தொண்டு

சுனாமியினால் விழுந்தசவம்    கண்டார்
செய்ய வந்தார் புனிதமிகு     தொண்டார்
சவக்குழிகள் தோண்டியவர்
சவம் புதைக்கும் போதந்தச்
செவி கழுத்து நகையுருவிக்   கொண்டார்.


10  குறுஞ்செய்-தீ

எஸ்எம்எஸ் அனுப்புகிறாள்    பாட்டி
எட்டிப் பார்த்தான் பேரன்     சூட்டி
எதிர்வீட்டுக் கிழவருக்காம்
எத்திவைத்தான் பாட்டனிடம்
எழுபது வயதில் மணவிலக்கு    நோட்டீஸ்.


11  புகழ்ச்ச்சீ

இனத்திற்காய் புரிந்த நற்     சேவை
இருக்கையில் புகழ்வதுவே    தேவை
இருக்கையில் மறந்தே போய்
இறந்தபின் புகழ்வோர்சிலர்
இழுத்துப் பிடுங்குஅவர்      நாவை.


12  வாழ்-கை

வாழும்போதே வாழ்த்துவதே     நன்மை
வேண்டுமெனச் சொல்லுகிறோம்  உண்மை
வாழ்கையில் மறந்துவிட்டு
வாழ்ந்தபின்னே சிலை வைத்தே
வணங்குதலை எதிர்த்திடுவோம்  வன்மை.


13  எப்.எம்.

ஹெல்லோ நான்தான் சூப்பர்    எப்எம்
ஹல்லோவ் உங்கள் குரலோ    செப்பம்
ஹீஹீஹீ நலமாண்ணா..?
ஹாய்.. சாப்பிட்டீங்களாம்மா..
ஹீ..ஹீ..அடிச்சேன்ணா ரெண்டு   அப்பம்.


14  மெம்பர்

கிணற்றுத் தவளையவர்       துள்ளி
கணக்கின்றி செலவழித்தார்    அள்ளி
காசுபணம்.. ஆயினுமவர்க்கு
கிடைத்தது ஏழு வோட்டு
கந்தறுந்து போய்ப்படுத்தார்    எள்ளி


15  அன்பு அளிப்பு

அமைச்சில் செயலாளர்   உள்ளார்
அகடம் செய்வதில்       வல்லார்
அவருக்கு அன்பளிப்பு
அகலமான என்வலப்பு
அளித்தால் எக்காரியமும் வெல்வார்.


16  புண்ணியப் பயணம்.

புரட்டிப் பணம் சேர்த்து   வெச்சு
புண்ணியம். புறப்பட்டார்   ஹஜ்ஜ-
பணமிருந்தால் ஹாஜியாராம்
பிணமானால் நேரே சொர்க்கமாம்
பத்துக்குமர் பக்கத்து வீடோ  குச்சு.


17  ஏகமும் நானே

தமிழரின் ஏகதலைவன்      நானே
தரணியெலாம் தனிஆளாய்   தானே
தமிழரசு ஆள்வேனென்று
தலைக்கணம் தழைத்ததால்
தமிழீழப்போர் போனது     வீணே.


18  பாடு-பட்டு.

கனடாவாழ் காதலருக்கும்    பாட்டு
கண்டறியா நேயருக்கும்     கேட்டு
கலகலவென கதைத்திருப்பார்
கலையுலக நண்பர்களாம்
காசுகரையுது கடனுக்கு ரீ   லோட்டு.


19 எம்பி எம்பி

தேர்தலில் குதித்தார்       எம்பி
தேனொழுகப் பேசினார்     தம்பி
தேர்தலில் வென்று
தேவைப்பட்டதைச் சுருட்டி
தேசம்விட்டு நீட்டினார்      கம்பி.


20  நடுநிசிநாய்கள்

நக்குத் தின்னும்         நாய்கள்
நக்கல் பின்னும்         வாய்கள்
நல்லவராய் நடித்து
நண்பரை நயவஞ்சிப்பர்
நரகலைத் தின்னும்      பேய்கள்..


21  பெப்பே

கன்னிக்கும் சேர்த்தெடுத்தார்  டிக்கற்
காசென்று பாராமல்        பொக்கற்
கன்னி பக்கத்தமர்ந்து வரக்
கனவு..கடைசி நிமிடம்
காக்காவுடன் வந்தமர்ந்தாள்  பெப்பற்.


22  தொலைகள்

தொலைபேசி அலுவலகத்தில்     அப்பா
தொலைக்காட்சி நாடகத்தில்     அம்மா
தொலைதூரத்தில் அண்ணா
தொலைநகல் காரனுடள்
தொலைந்து போனாள் மகள்     யம்மா.


23  ஓட்டோ

ரோட்டெல்லாம் ஓடுகின்ற      ஓட்டோ
ராமுழுக்கச் சத்தம்தான்       கேட்டோ
ரம்பமெனக் காதுகளில்
ரொம்பத்தான் அறுத்தாலும்
ரேட்டெல்லாம் குறைந்திடவே    மாட்டா..


24  சீனி-யர்

சீனி கொழுப்பு பிரசர்         கூட
சீனியப்பா கையில்ஊசி       போட
சீக்கிரமே போய்விட்டால்
சிறந்ததடா எனச் சொல்லி
சின்னவீடு சென்றார்          ஆட..


25  யுத்தம் நித்தம்

இறுதியாய் ஓய்ந்தது        யுத்தம்
இல்லை துப்பாக்கிச்        சத்தம்
இனிநிம்மதியே என்றெண்ண-
இந்நாட்டில் வாழ உமக்கு
இடமில்லை என்றார் தேரர்   பௌத்தம்.


26  ஆட்டா-டாட்டா

மகள் பள்ளிக்குச் செல்ல    ஆட்டா
மகள் ரியுசனுக்குப் போகவும் ஆட்டா
மாதமிரண்டு கழிந்திட
முச்சக்கரச் சாரதியுடன்
மகள் காட்டி மறைந்தாள்    டாட்டா..


27  மர்மப் புகழ்;

இவ்விலக்கிய இதழ்தான்     சூப்பர்
இன்சொற் புகல்வார்        டாப்பர்
இதிலொரு விஷயம்
இவ்விதழில் இவர்கவிதை
இருக்கிறதே..அதுதான் பார்  பேப்பர்.


28  ஊவ்..டகங்கள்

ஊடகங்களில்தான் எத்தனை  சேட்டை
உதவாக்கரை களின்புளுகு   மூட்டை
உன்னதமான கருத்தில்லை
உயர் நல் எண்ணமில்லை
உதவாது வீச வேண்டும்     சாட்டை


29  எ.... டிட்டர்

பெண்களின் கவிதைதான்    சுப்பர்
பெண்ணியல் கவிஞர் இந்த   மப்பர்
பத்திரிகையிற் போட்டுடன்
பஸ்ஏறித் தேடிப்;போய்
பல்லிளிக்கும் பேர்வழி எ    டிட்டர்.


30  நூலானார்

புத்தகச்சுச்; செலவுஒரு       பக்கம்
பிரதியனுப்பிய தொகைமறு   பக்கம்
பிரதிகள் ஓசியில் போக
பிரட்டி எடுக்க வழியின்றிப்
போனது கைமோதிரம்       ரொக்கம்.


31  தீ-ரன்

இக்குறும்பாக் களினரசன்     தீரன்
இருக்கின்றேன் சாய்ந்தமரு   தூரன்
இத்தொப்பி யார்க்கெல்லாம்
இணக்கமானால் அணிந்திடுக
இதற்குமேல் பேச்சில்லை     வாரன்.

---------------------------------------------------------------------
எனது மேலும் பல குறும்பாக்களை தூது கவி இதழில் ஆசிரியர் தலையங்கத்தில் காண முடியும் 
றறறவாழழவாரிழநவசiஉளைளரநள.டிடழபளிழவஇஉழஅ 
----------------------------------------------------------------------

பிணைக்கப்பட்ட இரு காற் பெரு விரல்கள்

பிணைக்கப்பட்ட இரு காற்பெருவிரல்கள் 



நெடும்பாலை
நெற்றியில் ஒருகைவைத்து
தொடுவானத்தில் பார்வை

நிழலின் தலையை மிதிக்க
ஓடும் பாதங்கள் ஓரு(க்) காலும் நடக்கா
வயதுச் சுமை அழுத்த
முதல் வெள்ளி விழுதை முப்பதில் இறக்க

பற்று(ம்) கோல் தேடி பரிதவிக்கும் கைகளுக்கு
ஆத்மீக ஊண்றுகோல் எந்தக் கடையில்..

நிலம் புணர்ந்த
நடை புதைந்து இறுதியாய்ää
மூன்றாவது விழிகளுக்கு
பிணைக்கப்பட்ட
இரு காற் பெருவிரல்களும் தெரிகையில்..?

அதனிலும் கீழே
வாழ்க்கை தெரியும்
1990.


பிறவித் தவம்

பிறவித் தவம்



பெருநதிப் பரப்பில் சிறு இலை மீதில்
ஒரு எறும்பு


ஒரு துடுப்பின்றி
நதி கடக்க எத்தனம்
நகர் தேடி நகர் தேடி 
நகர்கின்ற முயற்சி


ஊர் வீதியில்;
ஒரு நறுமணத் தேவதை
மஞ்சம் தொட அழைக்க-
மகிழ்வுறும் எறும்பு 
நாகங்களை மறந்து..
ஆயின்-


சிறுபடகோடும் சிறுநகர் வணிகரோ
பெருநதிப் பரப்பில் 
சிறு இலை மீதில்
ஒரு துடுப்பின்றிச் - சென்ற
சிறு எறும்பின் 
தலைவிதி எழுதிட


நெடுவொரு நாளில்
ஓரு இறை ஞானம்
தருமறைபொருள் விளங்க
இலைச் சிறு எறும்பு
இறையடி சேரும்.

1989.

பளீர் --- பதில்

பளீர்

மின்னல்
ஆண்டவனின்
அடையாள அட்டை
  00

   பதில்..?

ரெண்டு வயசு
மகள் கேட்டாள்
வாப்பா
வானம் செவப்பு
அதுக்கு
அறைஞ்சது ஆரு?
                 




சந்-- தூக்குத் தூக்கி

சந்- தூக்குத் தூக்கி;




என்னவாகிலும் செய்.
என் ஜனாசாவை 
குப்பையில் போட்டு எரி

நான் தக்பீர் கட்டிய பின்
பின்புறமாக முதுகில் சுடு.
என் ஹஜ்ஜாஜிகளை
வாகனத்தோடு கடத்திச் செல்.
ஒருவர் மிஞ்சாமல் கொன்று புதைத்து விடு.

ஐரோப்பிய அங்காடியில்
என் இருப்பை மறுதலித்து விடு.
எல்லாம் முடித்து
”மியை ஆண்டு கொண்டிரு நீ

ஆயின்-
உன்
மண்டை பிளக்கப்பட்ட
உடல் உட்பட
வானத்தால் கபனிடப்பட்ட
இந்தப் ”மிச் சந்தூக்கைத்.
தோளில் சுமக்க
இறுதியில் நானே வருவேன்.
(2011)

இனிப் பேசி முடியா

இனிப் பேசி முடியா..



முறிந்து போன 
பேச்சு வார்த்தையை
உறுதி செய்யப் 
பேச்சுவார்த்தை
ஓன்று செய்யப் போய்


பேச்சுவார்த்தை 
தடித்துவரப்
பேச்சுவார்த்தை 
முறிந்து போனது


பேச்சுவார்த்தை 
முறிந்ததேன் என ஒரு
பேச்சு வார்த்தை 
செய்ய
மறுபடி


முக்கியமாக
ஒரு பேச்சுவார்த்தை
செய்யப் போகிறார்கள்
நமது தலைவர்கள்..


அப்பேச்சு வார்த்தை 
நடக்குமாவென 
வா 
நாமொரு பேச்சு வார்த்தை 
செய்வோம் 
(1999)

புத்தரின் பாராளுமன்றம்

புத்தரின் பாராளுமன்றம்


மாதுவிட்டுää மதுவிட்டு
சூதுவாது பேதம் விட்டு
காவியணிந்து போதிமாதவன்
பாதம் சரணமென ஆதி தேடி
அலைந்த அலுப்புத் தீர
அமர்;ந்துகொள்ளவோ
அன்றி

வெளிநாடு பலவுஞ் சென்று
களிநடமாடிடவோ
குளுகுளு இரதங்களேறி
கொழும்புவலம்
வந்திடச்சித்தமோ
ஓலைச் சுவடிகளில் பதிந்து
வேலைவாய்ப்புக்களள்ளி
வழங்கிமிக இன்புறவோ
அன்றிப்

போராடும் குழுக்களையும்
போராளிகளையும் வேரோடழித்து
தம்மினங் காக்கத்
திருமிகவுளம்  கொண்டோ

ஐயனே
கௌதமரின் பையனே
காவிதரித்து விசிறி தாங்கிப்
பாராளுமன்றம் புகுந்தீர்?
2000.
2000.



விளங்காத அகராதி



விளங்காத அகராதி

மகனே
ஆங்கிலம் படி
நீ ஆங்கிலத்தில்
விஸாரிக்கும் போதுதான்
உலகம் உன்னை விஸாரிக்கும்
மகனே- நீ
ஆங்கிலம் படி


                            JVP  LTTE  PLOT

                            TELO  EPRLF  EPDP

                            PIRA  JIHATH  ENDLF

TELA  EROS  TNA  MLO

இவற்றுக்கு
என்ன அப்பா அர்த்தம்ää?

என்னருமை மகனே
ஆங்கிலம் படியாதே...

1990

அபாபீல்களின் அணுத் துகள்கள்

அபாபீல்களின் அணுத் துகள்.


சிங்கத்தின்
பிடரிமயிர் பிடுங்கி  என்
சின்ன மகனிடம் கொடுத்தேன்
இகழ்ந்து சிரித்தான்

புலிநகம் பதித்தொரு
புதுமாலை சமைத்தென்
புத்திரிக்களித்தேன்
பரிகசித்தாள்

வேழப்படையழிக்க
வேண்டும் வழியென்னப்பா
எனக் கேட்க
விழி பிதுங்கினேன்

ஐயோ வாப்பா-
அலகுகளில்
அணுத்துகள்;~ காவி
அகண்ட வானேகி
அன்றொருநாள் அபாபீல்கள்
ஆனைப்படையழித்ததை
அயத்தீர்கள் வாப்பா...

மக்களின் பதிலில்
மமதையழிந்தேன்.
2000

மோனம்

மோனம்




தனித்திருந்து
வெகுநேரம் அழு.


கண்ணீர் வழிந்து
கன்னம் வழியோடி
ஓரு குளமாய்
ஆன போதிலும் சரியே
.

உடற்கலங்கள் விம்ம
முதுகும் குலுங்கட்டும்
அல்லது
முன்னங் கைகளால
முழங்காலைக்கட்டிக் 
கொண்டாயினும்  சரியே


 கண்ணீர் ஓடி
 கடைவாயில் ஊறி
 உப்புச் சுவை
 உணரும் வரையும்
 அழு


 அழு (க்குகள்)
 கரையட்டும்.


11990




















நாளைக்குப் பெருநாள்

நாளைக்குப் பெருநாள்

வானப்பிறை
காதுச் சிமிக்கி அணிந்தது

குரோட்டன்கள்
மருதாணி அணிந்தன

வண்ணத்துப் பூச்சிகள்
வர்ணம் மாற்றின.

என் மகளும்
தாவணியில் புதிதாகத்
தைத்துக் கொண்டிருந்தாள்

பழைய
பொத்தல்களைத்தான்.

1990

வியத்தகு மனிதர் பீ ஏ மஜீத்




வியத்தகு மனிதர்
 பீஏ மஜீது.




எல்லா  ஆத’மாவும்
ஏற்றல் இயல்பு மரணத்தை.

பறந்து விட அவரது ஆத’மா
பழுதான இயந்திரத்தைக்
கழுவிடுங்கள்..கட்டழகைக்
கட்டிலிலே வைத்திடுங்கள்.

முடிதரித்தாண்ட மன்னவரின்
அடிகழுவி வைத்திடுங்கள்
றிபன் கிழித்துக் கைவாய் கட்டி
கபன் தரித்துக்
காட்டிடுங்கள் அவர் அழகை.

களனியிலிருந்து கணினிவரை
தந்தூக்குவித்தவரின்
சந்தூக்கைத் தூக்கிடுங்கள்
சடுதியாக-
சம்மாந்துறையின் சரித்திரத்தைச்
சுமந்து செல்லுங்கள்.

நன்னீர் தந்தவரின் கபுறடியில்
பன்னீரைத் தூவிடுங்கள் - ஏழைகள்
கண்ணீர் துடைத்த மன்னவரின்
கபுர்மண்ணைக் கூட்டிடுங்கள்

மின்சாரம் தந்தவருக்கு
மீசானை ஊன்றிடுங்கள்
சோறு தந்த
சேறுபடாச் செல்வனுக்கு
சோபனங்கள் சொல்லிடுங்கள்.

கண்ணுக்குள்ளே வாழ்ந்தவரை
மண்ணுக்குள் மறையுங்கள்.

நிரந்தரமாய் நம்
கல்புக்குள் வாழ்வதற்கு
கபுறுக்குள் வைத்திடுங்கள்...இறை
கருணைக்கு இறைஞ்சிடுங்கள்.

2011
(பாவலரின் காட்டுங்கள் என் சிரிப்பை கவிதையைத் தழுவியது)

மாவீரர் மேஜர் அன்பு என்கிற முஹம்மது அன்வர் ஞாபகமாக


மாவீரர் ~மேஜர் அன்பு| என்கிற
முகம்மது அன்வர் ஞாபகமாக



நம்மூர் நிலா
போர்க்குளத்தினுள் விழுந்து கிடந்த
ஓர் இரவில் என்னிடமிருந்து நீ விடைபெற்றாய்

ஓர் இருட்டில்
சந்திக்க வந்தாய் மறுபடி
ஓரு திருடனைப் போல
அன்வர்| என்றேன்
~அன்வர் இல்லை மேஜர் அன்பு| என்றாய்
உந்தன் தாக விழிகளில் தமிழ்
ஈழ வரைபடம் தெரிந்தது

நம்மூர் நிலாக்கள் வன்னிக்
குளத்தினுள் விழுந்தன
உம்மாவின் விழிகள் கண்ணீர்க்
குளத்தினுள் வாழ்ந்தன
நீ திரும்பி வரவில்லை இதுவரை

தீப்பந்ந்தம் அணைத்து
தீபங்கள் ஏற்றி ஓப்பந்தம் செய்து
ஓப்பங்கள் இடும் இந்நேரம்
உம்மா பாவம் மகிழ்கிறாள்
உன்னைக்கண்டு உச்சிமுகரத் துடிக்கிறாள்

ஈகைச்சுடர் கொழுத்திப் பொங்கும் தமிழரிடையே
தேடுகிறாள் உனக்காக தின்பண்டங்கள்; செய்கிறாள்

மகனே அன்வர் எங்கே மேஜர் அன்பு எங்கே..
அன்பே நீ எங்கே

என்னால்  உம்மாவுக்குச் சொல்ல முடியவில்லை
சொல்லவும் போவதில்லை

அஞ்சலிச் சுவரொட்டிகளில் அந்நேரமே நீ
ஓட்டப்பட்டு இருந்ததை
மாவீரர் துயிலிடத்தில் ஓரிடத்தில்
தனியிடத்தில் நீ கவனிக்கப்படாமலும்
~கபனி~டப்படாமலும்
விதைக்கப்பட்டிருப்பதை.
எப்படிச் சொல்ல..?

2000.

நான் இறந்த தினம்

நான் இறந்த தினம்

அப்துல் கபுர்
உப பொலிஸ் கொஸ்தாப்பல்
இலக்கம் ஆர்.பீஸி.32280

இருபத்தினாலு வயசு
இளமீசை
தீட்சண்யப் பார்வை திகட்டாத நண்பன்

காக்கி உடுப்பின் கசங்கலை
நிமிர்த்தி அணிந்தான்.
காலில்லாத காக்காவுக்காக..

இடையில் தரித்தான்
இடுப்புப் பட்டியை
இன்னும் வாழாத ராத்தாவுக்காக..

வெள்ளி இலக்கத்தை
மார்பில் சூடிக் கொண்டான்..
தள்ளிப் பிறந்த தங்கைகளுக்காக..

எண்ணெய் தடவி
எஸ்ஸெல்லாரை எடுத்தான்.
ஏலாத வாப்பாவுக்காக...

இருபத்திநாலு வயசு
இளமீசை
தீட்சண்யப் பார்வை திகட்டாத நண்பன்
இன்று
திரும்பி வந்தான்
ஒரு மையித்தாக.
1991.



கறுப்பு வெள்ளையில் ஒரு கலர் கனவு

கறுப்பு வெள்ளையில் ஒரு கலர் கனவு




சின்னஞ்  சிறிசில் சீனத்-உன்னுடன்
சின்ன   வீடு கட்டி மண்ணுடன்
கூமாக் கூமாப் பொத்தி என்னுடன்
சின்ன விரலில் நெட்டிமுறித்தும்

சத்தம்  போட்டுச் சண்டை பிடித்து
அத்தம்  விட்டுச் சத்தியம் செய்து
கத்த   வீட்டு   ஒறட்டி வெறுத்து
அத்த   மாபழமா விரல்கள் தொட்டு

நெத்தியில் சிப்பிப் பொட்டு வைத்து
தத்திக்   கோடு   எட்டிப் பாய்ந்து
பொத்திக் கண்கள்  கூட்டிச் சென்று
சித்தெ   றும்புக்  காட்டில் விட்டும்

சருகு   மிட்டாய்   சாம்பல் அப்பம்
அடுக்குச் சட்டி ஆரத்திச் செப்பு
குருத்து  மாலைக் குரும்பட்டிப் பதக்கம்
கழுத்தில் சூடிக்   கலியாணம் முடித்தும்

அலுப்பே யின்றி   அஸரில் வந்து
அலிப்பே தேயிதே  ஓதித் தந்த
லெப்பை மிதிவடிக்  கட்டையும் ஊத்தைத்
தொப்பியும் திருடிப் பிரம்படி பட்டும்

செத்தைக்  குடிலில்  ஒருநாள் மார்பில்
மெத்தெனச் சாய்ந்து  வியர்த்துக் கிடந்ததும்

இத்தனை   நினைவும் சட்டென வந்தது
சீனத்  துனையுன்  கணவனுடன் கண்டதும்.

(1989)

வானவில்




வானவில்லுக்காக வானத்துடன் வசனித்தல்



வானவில்லை வர்ணிக்க
வசனங்கள் சிலதேடி
வானத்துடன் வசனித்தேன்

வானவில்
காலக்கிளி அணிந்த
கழுத்து ஆரம் என்றேன்
இல்லை என்று நாணியது வானம்

வானவில்
மாலைப்பெண்ணின்
மசக்கை மருதாணி
உடுக்கள் சுற்றும்
குடை ராட்டினம்
குளிர்காலம் அனுப்பிய
வெளிநாட்டுக் கடிதம்

வானவில்
மின்னல் பெண்ணின்
வர்ணப் புகைப்படம்
காற்றில் கலையாதää
கற்பனை ஒப்பனை
மாரிக் கன்னியின்
மார்புத் தாவணி

வர்ணித்து வரைந்தேன்.
இல்லையில்லை என்று
வெட்கியது வானம்

வானவில்
ஆதி எறிந்தää
பாதி மறைந்த பம்பரம்
திசைக் கோணமளக்க
பரிதி வைத்த பாகைமாணி

இந்திரவில்லின் வர்ணப் பதிப்பு
விப்ஜியோர் கம்பனியின்
வர்ணத் தொலைக்காட்சி
ஏழ்நிறக் கட்சிகளின் கூட்டணிக்கொடி
கண்களுக்குக் கதிர்கள்
எழுதிய ஏழ்சீர் விருத்தம்

புகழ்ந்து புனைந்தேன்
இல்லவேயில்லை
என்று புன்னகைத்தது வானம்

வானவில்
மேகங்கள் காணும்
கனவுக் கண்காட்சி
அந்திமாலை அணிந்த
வர்ணத் தாலி
வான ஐயரின்
வர்ணப் பூணூல்
பூமிக்கு வராத விண் பூங்கா

தமிழால் தடவி விட்டேன்
இல்லையே என்று தயங்கிய வானம்-

தான் ஒன்றுசொன்னது-
வானவில்
மழையின் ~மின்னஞ்சல் முகவரி

அட-
அதிசயித்து
அண்ணார்ந்து பார்த்தேன்

காணவில்லை
வானவில்லை..
00)




அபாயா என் கறுப்பு வானம்

அபாயா-
அது என் கறுப்பு வானம்.

அது என் உரிமை
அது என் கறுப்பு உயில்.

தன்மானம் பேணும்
தனித்துவத் தனித் துணி- புனித
கஹ்பா அணிகின்ற கறுப்பு இஹ்ராம்.

அபாயா-
அது என்னைக் காக்க வந்த அபாபீல்.
கட்டாயம் அணிய வேண்டிய
கறுப்புக் கேடயம்.

காத்துக் கறுப்பு அண்ட முடியாத
கறுப்புக் காற்று.

அபாயா-
கறுத்த இருளுக்குள் வெள்ளை நிலாவை
ஒழித்து வைத்திருக்கும்
ஒரு மந்திரப் போர்வை.

முழு உலகும் மகளிர்
சுற்றிவரச் சுதந்திரம் தரும்
கறுப்பு வீசா.
கடும் தொலையிலும்
கண்ணில் படும் கறுப்பு மின்னல்

அது-
பெண்ணுரிமையின் முதற்படி

கருவிஷமப் ”ச்சிகளுக்கு- அது
ஒரு கறுப்புத் துளசி
காமுகர் விழிக்கணை தடுக்கும்
கறுப்பு ஏவுகணை.
இனத்துவேசிகள் மீது
இரைந்து சீறி எழும்
ஒரு கருநாகத்தின் படம்.


அபாயா-
நான்
விருப்புடன் அணியும் கறுப்பு மேகம்.
தங்கத்தை தன் கைக்குள்
பொத்தி வைத்திருக்கும் கறுப்பு வைரம்.

அது-
நகைகள் தேவைப்படாத
கரு நவரத்தினம்.
ஒப்பனை இன்றிய
கற்பனை ரகசியம்...

ஒரு நெற்றிப் பிறையையும்
இரு சுட்டு விழிகளையும்
மட்டும் படம் பிடித்துக் காட்டுகிற
முக்காட்டு வலைத் தளம்.
கறுப்பு வழிகளின்  கவிதைக் களம்.

அபாயா-
மரணம் தவிர
மற்றவைக்கு மருந்து தரும்
ஆடைக்கருஞ்சீரகம்.

தங்கைக்கு அது தற்காப்புக் கலையாடை
மனைவிக்கு அது மறைமுக முகவரி
அன்னைக்கு அது ஆதரவுக் கரம்.

முஸ்லிம் மகளிர் மட்டுமல்ல
முழு உலகப் பெண்களும்
மூடவேண்டிய மூடுமந்திரம்.
கணவனைக் கண்காணிக்கும்
கடும் தந்திரம்.

அது-
கற்பைக் காக்கும் கறுப்புக் காடு
பலரதும்
பாலியல் இம்சை தடுத்திடும்
பாலைவனத்து கறுப்புத் தூசி..

யார்க்காகவும் விட்டுவிடாத
மார்க்கக் கட்டுப்பாடு

அபாயா
அது எப்போதும்
என் கறுப்பு வானம்.

(2014)